tamilnadu

ராமாபுரத்தில் இளம்பெண் தற்கொலை

போரூர், மார்ச் 7- ராமாபுரம் வள்ளுவர் சாலையை சேர்ந்தவர் அருண். தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காஞ்சனா (29). இவர் சனிக்கிழமையன்று (மார்ச் 7) அதிகாலை வீட்டில் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காஞ்சனா உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இலங்கையைச் சேர்ந்த காஞ்சனாவிற்கு முகநூல் மூலம் அருண் நண்பராக அறிமுகமாகியுள்ளார். இருவரும் காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்தனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காஞ்சனா தற்கொலை செய்து கொண்டது குறித்து அருணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.