திருவொற்றியூர், ஜூலை 6 - கொரோனா காரணமாக தனிமைப்ப டுத்தப்படும் வீடுகளில் உள்ளோர் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்ற னர். இதனால் வீடுகளை தனிமைப்படுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எண்ணூர், வ.உ.சி நகரில் கடந்த ஜூலை 1 அன்று காய்ச்சல் முகாம் நடைபெற்றது. அங்கு பரிசோதித்துக் கொண்ட 60 பேரில், 7 பெண்கள், 8 ஆண்கள் என 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து, அன்று இரவு, ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் திருவொற்றியூர் அரசு மருத்து வமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்து வர்கள், அறிகுறிகள் இல்லாததால் வீட்டி லேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஜூலை 3ந் தேதி அந்த பகுதிக்கு வந்த மாநக ராட்சி அதிகாரிகள் வீடுகளை தனிமைப்ப டுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே, இரண்டு வீடுகளை தனி மைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் உதவி செய்ய வர வில்லை. இங்குள்ளவர்களே சாப்பாடு, தண்ணீர் கொடுத்து வருகிறோம். எனவே, தனிமைப்படுத்தி தடுப்பு அமைக்க கூடாது என்று வாக்குவாதம் செய்தனர். இதனை யடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர்.