tamilnadu

img

சர்வதேச கராத்தே போட்டியில் மாணவர்கள் பதக்கவேட்டை

சென்னை, ஆக. 29- ஷிமோகா சர்வதேச 2ஆவது கராத்தே போட்டி பெங்களூரு சுமோகோவில் உள்ள  நேரு உள்விளை யாட்டு அரங்கில் ஆகஸ்ட் 24, 25 ஆம் தேதி நடை பெற்றது.  இதில் இந்தியா, மலேசியா, நேபாளம், ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு  பங்குபெற்றனர்.  சென்னை திருவொற்றி யூரைச் சேர்ந்த கென்வா ஷிட்டோரியோ கராத்தே டூ அசோசியேசன் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் பங்கேற்றனர். கென்வா சிட்டோரியோ கிராண்ட் மாஸ்டர் சண்முகராஜன் தலைமையில் வீரர்கள் பங்கேற்றனர். பிராங்கிளின் டேவிஸ் (15) ஒரு தங்கப்பதக்கமும், ஒரு வெள்ளியும் பெற்று வெற்றி பெற்றார். கத்தா என்கிற நிழல் செயல்முறை பயிற்சி மற்றும் குமிதே என்ற சண்டைப் பிரிவுகளில், ரூபேஷ் (9) வெள்ளி, வெண்கலம், அர்ஜூன்குமார் (9) வெள்ளி, வெண்கலமும் வென்றனர்.  தினேஷ் (9) வெள்ளி, வெண்கலமும், சம்பத் (9) வெள்ளி, வெண்கலமும்,  முகமதுஅனஸ் (13) 2 வெள்ளிப் பதக்கத்தை யும் வென்றனர். தீபக்ரத்தனம் (14) 2 வெண்கலம் வென்ற னர். கிராண்ட் மாஸ்டரின் சீடர் டி.சுதாகர்  குழுவை வழி நடத்தினார்.