tamilnadu

img

ஐந்து மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை:
சேலம், தருமபுரி, புதுக் கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.ஆகஸ்ட் 27 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல், குஜராத் கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 60 வேகத் தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

;