சென்னையில் மாநகராட்சி சுரங்கப் பாதைகளில் ஓவியக்கல்லூரி மாணவர்கள் அரசு சாரா தொண்டு நிறுவன ஊழியர்கள் அழகான ஓவியங்களை தீட்டி அழகு படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சைதாப்பேட்டை பவளவண்ணன் சுரங்கப்பாதையில் தமிழகத்தின் கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.