tamilnadu

சென்னையில்  மாநில அளவிலான 10 ஆவது சாரணர் பெருந்திரளணிகள் நிகழ்வு

 சென்னை, ஆக. 19- பாரத சாரண சாரணி யரின் 10ஆவது மாநிலப் பெருந்திரளணி சென்னை யில் வரும் 27ஆம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ளதாக மாநில முதன்மை ஆணை யர் இளங்கோ கூறினார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் இதுவரை 1968ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை 9 மாநில பெருந்திரளணிகள் நடை பெற்றுள்ளது. 22 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்பொழுது 10ஆவது மாநில பெருந்திரளணி நடை பெறவுள்ளது. இந்த பெருந்திரளணியின் பிரதான நோக்கம் மாணவர்களிடம் மறைந்துள்ள பல்வேறு திறமைகளை வெளி க்கொண்டு வருவதேயாகும். திரளணியில் நடத்தப்படும் பல்வேறு விளையாட்டுகள் அவர்களின் ஆளுமை பண்புகளை வளர்ப்பதற்கு வாய்ப்பாக அமையும், மேலும் தன்னம்பிக்கை மற்றும் தலைமைப் பண்பை வளர்க்க உதவுகிறது. 10 ஆவது மாநிலப் பெருந்தி ரளணி 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. பெருந்திரள ணியை தமிழக ஆளுநர் துவக்கி வைக்கிறார். துவக்க விழா நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமை ஏற்கவுள்ளார். 2ஆம் நாள் நிகழ்வில் சந்திரயான் திட்ட இயக்குநர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரையும், 3ஆம் நாள் நிகழ்வில் முனைவர். சி.சைலேந்திரபாபுவும், 4ஆம் நாள் நிகழ்வில் பாரத சாரண சாரணிய தேசிய முதன்மை ஆணையர் டாக்டர் கே.கே.கந்தல்வால் ஆகியோர் பங்கேற்கின்ற னர். இவ்வாறு அவர் கூறினார்.