tamilnadu

img

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதி

சென்னை:
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருவதாக, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வெள்ளியன்று (ஜூலை 3) அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  கூறியதாவது:“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கென பிரத்யேகமாக 400 படுக்கைகள் உள்ளன. இது 800 படுக்கைகளாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனை 1,600 படுக்கைகளாக உயர்த்துவ
தற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவை தீவிர சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளுடன் ஏற்படுத்தப்படும்.

வியாழக்கிழமை  (ஜூலை 2) வரை தமிழகத்தில் 56,021 பேரை குணப்படுத்தியிருக்கிறோம். இது மிக முக்கியமானது. அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப் படுகின்றன. தமிழகம் முழுவதும் இருக்கக் கூடிய மாவட்ட மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் கள் வசதியை மேம்படுத்த ரூ.75 கோடி ஒதுக்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.ஆக்சிஜன் பைப்லைன் அமைக்கும் பணி போர்க்கால நடவடிக்கையாக மேற்கொள்ளப்
படுகிறது. எல்லா மருத்துவமனைகளிலும் 40 கிலோ லிட்டர் திறனுள்ள ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு வருகிறது. அதனை திரவநிலை ஆக்சிஜனாகக் கொடுக்கிறோம். அப்படிக் கொடுக்கும்போது 1 லிட்டர் திரவ ஆக்சிஜன், 800 லிட்டர் வாயு நிலையிலுள்ள ஆக்சிஜனாக மாறும். ஆக்சிஜன் வசதி உட்பட படுக்கை வசதி என அனைத்து வசதிகளையும் அரசு மருத்துவமனைகளில் மேம் படுத்தி வருகிறோம்”.இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

;