tamilnadu

img

ஆபாச பேச்சு பேர்வழி மகாவிஷ்ணு சிறையில் அடைப்பு

சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ‘மோட்டிவேஷனல் ஸ்பீச்’ என்ற பெயரில், பரம்பொருள் அறக்கட்டளையை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர்  வகுப்பு எடுத்துள்ளார். அப்போது, மூட நம்பிக்கையை  பரப்பும் வகையில் பேசியதுடன் ஆபாசமான கருத்து களையும் தெரிவித்துள்ளார். மேலும், மாற்றுத்திறனாளி களை இழிவுபடுத்தி இருக்கிறார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள். அமைப்புகள், கல்வியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தன.அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.

இதனையடுத்து  ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணுவை  சைதாப்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை, செப்டம்பர் 20 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் ஒரு வழக்குப் பதிவு

இந்நிலையில் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் சரவணன் கொடுத்த புகாரில் திருவொற்றியூர் போலீசார் மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.