சென்னை, ஜூன் 25- விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் இரண்டு நாட்களில் வெளியேற வேண்டும் என்று சென்னை ஐஐடி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐஐடியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். பொதுமுடக்க காலத் திற்கு முன்பு விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள், சூழல் சரி யாகும் வரை தொடர்ந்து தங்கியிருக்க நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள், வளாகத்தில் குடி யிருக்கும் பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட் டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2 நாட்களில் மாண வர்கள் விடுதிகளை காலி செய்ய வேண்டும் என்று ஐஐடி நிர் வாகம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து வசதி இல்லாத நிலை யில், நிர்வாகம் விடுதியை காலி செய்ய உத்தரவிட்டிருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.