tamilnadu

img

இனியும் நாம் எழாவிட்டால்...

சென்னை:
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும், அதன் விழுவியங்களையும் பாதுகாப்பதற்கான அகில இந்திய எதிர்ப்பு நாள்செப்டம்பர் 5 அன்று நாடு முழுவதும் உள்ளபெண்கள் அமைப்புகள், மாற்று பாலின, பாலீர்ப்பு கொண்ட மக்கள் குழுக்கள், மனித உரிமைக் குழுக்கள் ஆகியவை இணைந்து கடைப்பிடித்தன.இதையொட்டி தமிழகத்தில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தேசிய மாதர் சம்மேளனம், மகளிர் விடுதலை இயக்கம், மனிதி உள்பட 33 அமைப்புகள் இணைந்து “இனியும் நாம் எழாவிட்டால்” என்ற முழக்கத்தின் கீழ் கோரிக்கைஅட்டைகளை ஏந்தி இயக்கம் நடைபெற் றது. தமிழகம் முழுவதும் சுமார் 250 மையங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டபெண்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர்.

;