tamilnadu

img

சென்னையில் கொரோனா தொற்றால் ஊடகவியலாளர் வேல்முருகன் உயிரிழப்பு

சென்னை, ஜூன் 27- கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்ட ராஜ் தொலைக்காட்சி ஒளிப்பதி வாளர் இ.வேல்முருகன் சனிக்கிழமையன்று (ஜூன்  27) உயிரிழந்தார். அவருக்கு வயது 41. சென்னையில் மட்டும் கொரோனாவால் சுமார் 200  ஊடகவியலாளர்கள் பாதிக்  கப்பட்டுள்ளனர். ராஜ் தொலைக்காட்சி ஒளிப்பதி வாளர் வேல்முருகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர  சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்  கப்பட்டிருந்தார். சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி சண்முக சுந்தரி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியராகப் பணிபுரிகிறார். 12 வயதில் ஜீவா என்ற மகன் இருக்கி றார். அவரது மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலை வர் மு.க.ஸ்டாலின், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டு அரசியல் கட்சித் தலைவர்  கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு பத்திரிகை யாளர் சங்கம், மாற்றத்திற் கான ஊடகவியலாளர் மையம், சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்  கம் உள்ளிட்ட அமைப்பு களும் இரங்கல் தெரி வித்துள்ளன. சென்னை பத்திரிகையா ளர் மன்றம் வெளியிட்டள்ள அறிக்கையில், வேல்முரு கனின் குடும்பத்திற்கு கரு ணைத் தொகையாக 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், அவரது மனைவி சண்முகசுந்தரியை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பத்திரிகையாளர்களுக் கென்று உடனடியாக காப்பீட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. ரூ.5 லட்சம் நிவாரணம் வேல்முருகன் மறை வுக்கு இரங்கல் தெரிவித் துள்ள முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அவரது  குடும்பத்திற்கு பொதுநிவாரண நிதியி லிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறி வித்துள்ளார்.