tamilnadu

சிலை முறைகேடு: முன்னாள் ஆணையருக்கு நிபந்தனை ஜாமீன்

சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணிக்கு நிபந்தனை ஜாமீன் 

வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், சோமாஸ்கந்தர் சிலை செய்தபோது, 8 கிலோ 770 கிராம் தங்கம் அபகரிக்கப் 

பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த 15 ஆம் தேதி கைது செய்தனர்.இந்நிலையில், தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி வீரசண்முகமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வீரசண்முகமணிக்கு நிபந் தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். விசாரணைக்கு அவர் 

முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

;