tamilnadu

ஆசிரியை தாக்கியதில் மாணவருக்கு பார்வை பாதிப்பு 2 வாரத்தில் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை, மார்ச் 5- வீட்டுப்பாடம் செய்ய வில்லை எனக்கூறி மாண வரை இரும்பு ஸ்கேல் மூலம் ஆசிரியர் தாக்கியதில் பார்வை பாதிக்கப்பட்ட விவ காரத்தில் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலா ளர், இயக்குனர் 2 வாரத்துக் குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள் ளது. சென்னையை அடுத்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த மாணவர் கார்த்திக் (13). இவர் மேடவாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரு கிறார். வீட்டுப்பாடம் செய்ய வில்லை எனக்கூறி மாணவர் கார்த்திக்கை பள்ளியின் தமிழ் ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் அடித்தார்.இதன்காரணமாக அவரது இடது கண் பார்வை பாதிக் கப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து எழும்பூர் கண் மருத்துவ மனையில் மாணவர் அனு மதிக்கப்பட்டார். அங்கு, அவரது கண் பார்வையை சரி செய்ய முடியாததால் சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணை யத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வீட்டுப்பாடம் செய்ய வில்லை என்பது போன்ற காரணங்களுக்காக பள்ளி மாணவர்கள் உடல் ரீதியாக தாக்கப்படுவதை தடுக்க மாநில அளவில் பள்ளிக் கல்வித்துறை என்ன நட வடிக்கை எடுத்துள்ளது?, மாணவரை தாக்கிய ஆசிரி யர் மீது எடுத்த நடவடிக்கை என்ன?, கண் பார்வை பாதிக் கப்பட்டுள்ள மாணவனுக்கு தமிழக அரசு சார்பில் இழப் பீடு எதுவும் வழங்கப்பட்டுள் ளதா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், இயக்குனர் ஆகியோர் 2 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியு ள்ளார்.