சென்னை, ஆக. 24 - காவிரி டெல்டாவில் துவங்கவுள்ள தொழில்கள் குறித்து, மாநில அரசு உடனடியாக வெளிப்படைத் தன்மையு டன் திட்ட அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக தமிழக சட்டமன்றத்தில் ஏற்கெனவே திருச்சி ராப்பள்ளி முதல் நாகப்பட்டினம் வரை யிலான பகுதிகள் வேளாண் தொழில்தட பெரும் வழிச்சாலையாக அறிவிக்கப் பட்டது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதி களில் விவசாயம் சார்ந்த தொழில்கள் துவங்கப்படும் என அறிவித்தனர். தற்போது அதற்காக தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, திருவாரூர் மாவட்டம் மன் னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி பகுதிகளில் சிப்காட் மூலம் நிலம் கைய கப்படுத்துவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்கள், பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, அதற் கான சட்டமும் சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிதாக தொழில்கள் துவங்க நிலம் கையகப்படுத்துவதற்கான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், எவ்வளவு நிலம் கைய கப்படுத்தப்பட உள்ளது, எந்த வகையான தொழில்கள் துவங்கப்பட உள்ளன என்பன உள்ளிட்ட விவரங்களை மாநில அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
மேலும், காவிரி டெல்டா மாவட்டங்க ளில், ஏற்கெனவே நஞ்சை நிலங்கள் சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில் விவசாயம் சார்ந்த தொழில்கள் மட்டுமே துவங்கப்பட வேண்டும், அதற்கும் நஞ்சை நிலத்தை கையகப்படுத்திட கூடாது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில அரசை வலியுறுத்து கிறோம். மேலும் வேளாண் தொழில்தடத்தில் தொழில்கள் அமையவுள்ள இடங்களில் முதலில் விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்திட வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட காவிரி டெல்டா விவசாயத்தை பாதுகாப்பது மிக முக்கியம் என்பதை அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு சாமி. நடராஜன் கூறி யுள்ளார்.