tamilnadu

img

அரசு அனுமதிக்காத நிலையில் எப்படி வேல் யாத்திரை செல்ல முடியும்? பாஜக தரப்புக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி....

சென்னை:
அரசு அனுமதி அளிக்காத நிலையில் எப்படி வேல் யாத்திரைசெல்ல முடியும்? என்று பாஜகதரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.தமிழகத்தில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை ஒரு மாதம் மேற்கொள்ளவிருந்த பாஜகவின் வேல்யாத்திரைக்கு எதிராக சென்னைஉயர்நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கில், கொரோனா தொற்று பரவல் உள்ளதால் பாஜகவின் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. இந்நிலையில் வேல் யாத்திரையை தடுக்கக் கூடாது என்றும், பாஜகவின் வேல் யாத்திரைக்கு போலீசார்பாதுகாப்பு வழங்க வேண்டுமென் றும் தமிழக பாஜக சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது செவ்வாயன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது பாஜகவின் வேல் யாத்திரை தொடர்பாக டிஜிபிதரப்பு சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது நீதிபதிகள், அரசு அனுமதி அளிக்காத நிலையில் எப்படி யாத்திரை செல்லமுடியும்?. வேல் யாத்திரையில் தலையிடக் கூடாது என அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட முடியாது. அனுமதி பெறும் வரை பொறுத்திருக்காமல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்? என்று பாஜக தரப்புக்கு சரமாரியாக கேள்வி களை எழுப்பினர்.  

கூடுதல் தகவல்களுக்கு தலையங்கம்....... 4 பக்கம்