ஆவடி, மார்ச் 19- சென்னை ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் 120 வீடுகள் கொண்ட குடியிருப்பு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ளது. வீடுகளில் பத்து வீடுகள் விற்காத நிலையில் உள்ளது. அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகள் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் இந்த கண்டுகொள்ளாத போக்கால் மேலும் குப்பை கிடங்காக மாறி வரும் நிலை உள்ளது. குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதாரச் சீர்கேடால் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனே அரசு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து மக்களை கொசுக்கடியிலிருந்தும் துர்நாற்றத்தில் இருந்தும் கொரோனா வைரஸ் என்ற அச்சத்திலிருந்தும் காப்பாற்ற வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.