ஓசூர் மாநகராட்சி 1 வது வார்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
மாநகராட்சி ஆணையர் சினேகா தலைமையில் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்தியா புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறந்து வைத்தார். இரண்டாவது வார்டு உறுப்பினர் ஸ்ரீதர்,சுத்திகரிப்பு இயந்திர நிறுவனர் திம்மராயப்பா,ரோஜா நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் காதர்,மாநகராட்சி மண்டல தலைவர் ரவி கலந்து கொண்டனர்.
திட்ட நிதியில் ரூ.3 லட்சம் அரசு கொடுத்த நிதியுடன் 1வது வார்டு மக்கள் சார்பாக ரூ.7 லட்சம் நிதியை மாநகராட்சி 1வது வார்டு உறுப்பினரும்,ஓசூர் மாநகராட்சி திட்டக் குழு உறுப்பினருமான அசோக் ரெட்டி நன்கொடையாக வழங்கினார்.
மாநகராட்சி ஆணையர் சினேகா தலைமையில் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்தியா புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறந்து வைத்தார். இரண்டாவது வார்டு உறுப்பினர் ஸ்ரீதர்,சுத்திகரிப்பு இயந்திர நிறுவனர் திம்மராயப்பா,ரோஜா நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் காதர்,மாநகராட்சி மண்டல தலைவர் ரவி கலந்து கொண்டனர்.
மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
சென்னை, ஜூன் 26- ஜார்கண்ட் மாநிலம் பலமு பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ்ராம் (50). கட்டடத் தொழிலாளியான இவர், சென்னை தேனாம்பேட்டை கார்ப்பரேசன் காலனியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தின் சார்பில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர், அங்கேயே தங்கியிருந்தார்.
நாகேஷ்ராம், செவ்வா யன்று அந்த கட்டடத்தின் முதல் தளத்தில் சாரம் அகற்றும் பணியில் ஈடு பட்டிருந்த போது, திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்தக் காயமடைந்த நாகேஷ்ராம் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார்.
இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருள் விற்பனை பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்
காஞ்சிபுரம், ஜூன் 26 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யும் மர்ம நபர்கள் குறித்து, பொதுமக்கள் தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் உற்பத்தி, விற்பனை, கடத்தல் செயல்கள், கஞ்சா, குட்கா, பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுவது குறித்து தெரியவந்தால் புகார் தெரிவிக்கலாம்.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் 94441 34000, மாவட்ட போலீஸ் எஸ்பி 94442 12749, மதுவிலக்கு பிரிவில் வாட்ஸ் அப் எண்: 82489 86885, சென்னை கட்டுப்பாடு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுப்பாளையத்தில் பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல்
கடலூர், ஜூன் 26 - கடலூர் புதுப்பாளையத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.25 லட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டு விழா புதனன்று நடைபெற்றது.
விழாவிற்கு மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை நாச்சியார், மண்டல குழு உறுப்பினர் பிரசன்னா, கவுன்சிலர் அலமேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, கூடுதல் வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி உறுப்பினர்கள், தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, பொறியாளர் ரகுராமன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட கலந்து கொண்டனர்.
கஞ்சா விற்றவர் கைது
விழுப்புரம், ஜூன் 26- விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.கடந்த 23.05.2024 அன்று காட்ராம்பாக்கம் சுடுகாடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், காட்ராம்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வாஞ்சிநாதன் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 1 கிலோ, 100 கிராம் அளவு எடை கொண்ட கஞ்சா பறி முதல் செய்து,நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.