ஓசூர், நவ. 20- ஓசூர் காவேரி மருத்துவமனை யின் ஆண்டு விழாவை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் விழாவும் விளையாட்டுப் போட்டியும் நடத்தப் பட்டன. இந்த விழாவையொட்டி மகா லஷ்மி நகரில் ஹைக்யூ எலக்ட்ரா னிக்ஸ் மேலாண்மை இயக்குநர் வெங்கடாசலம் மரக் கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.வெண்ட் இன்டியாவின் வணிகத் தலைவர் சுந்தரையா , மது வெங்கடாசலபதி, அசோகன், மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். சதுரங்கம், கைப் பந்து, பூ ப்பந்து, கிரிக்கட், கேரம் விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. இதில் மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர், மருத்துவர் விஜயபாஸ்கர், மருத்து வர்கள் நாகேஷ், அரவிந்தன், மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.