திருவண்ணாமலை ஆட்சியர்ஆய்வு
திருவண்ணாமலை, மார்ச் 13- திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் தோட்டக்கலை பண் ணையை மாவட்ட ஆட்சி யர் க.சு.கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், புதூர் செக்கடி கிராமத்தில், முதல் முறையாக ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் அரசு தோட்டக் கலைப் பண்ணை அமைக் கப்பட்டு வருகிறது. இப்பண்ணை 2018-19 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சி யரால் முன் நுழைவு அனுமதி அளிக்கப்பட்டு தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர் கள் துறை மூலமாக ஆரம் பிக்கப்பட்டது. பண்ணை யின் மொத்த பரப்பு 12.76 எக்டர் ஆகும். தற்போது பண்ணையின் முதற்கட்ட பணிகள் ரூ.90 லட்சம் மதிப் பீட்டில் பண்னை அலுவலர் கட்டிடம், பண்ணை பாது காப்புக்கான வேலி, நீர் ஆதார வேலைப்பாடுகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நடப்பு 2019-2020 ஆம் ஆண்டு ரூ.16 லட்சம் எண்ணிக்கையிலான உயர் ரக காய்கறி விதை நாற்றுக்கள் குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்து மாவட்டத்திலுள்ள 18 வட்டாரங்களில் உள்ள விவ சாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மானாவாரி பயிர் சாகுபடி திட்டத்தின் மூலம் 4350 வறட்சி தாங்கி வளரும் பழக்கன்று நாற்றுக்கள் உற்பத்தி செய்து 11 வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு விநி யோகம் செய்யப்பட்டுள் ளது. இப்பண்ணையின் முதற்கட்ட செயல்பாடுக ளுக்கு உள்ளூர் கிராமங்களி லிருந்து 22 கூலி பணி யாளர்கள் தேர்வு செய்யப் பட்டு பணிபுரிந்து வருகின்ற னர். இவர்களின் வாழ் வாதாரத்திற்காக தினமும் ரூ.300 கூலியாக வழங்கப்படு கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கப் பட்டுள்ள முதல் அரசு தோட்டக்கலை சார்ந்த பண்ணையாகும். இப்பண்ணையிலிருந்து பொது விழாக்காலங்களில் பரிசுப் பொருளாக வழங்கப்படும் அழகுத் தாவரங்கள், பழச் செடிகள், மர வகைகள் முதலிய வற்றை உற்பத்தி செய்து குறைந்த பட்ச விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும், இப்பண்ணை யில் 19 இலட்சம் எண்ணிக்கை யில் தோட்டக்கலைப் பயிர் கள் இந்த வருடம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானியம் மற்றும் குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது.