tamilnadu

சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்துக... 1ம் பக்கத் தொடர்ச்சி

வதற்கான விவாதத்தை நடத்திட வேண்டும். 

2) அனைத்து அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் இதர ஜனநாயக அமைப்புகளைக் கொண்ட கூட்டத்தை நடத்தி, முதலமைச்சர், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனைகளைப் பெற வேண்டும்3) பெண்களைப் பாலியல் ரீதியாக இழிவுபடுத்தும், அச்சுறுத்தும் வலைத்தள பதிவுகளை நீக்குவதற்கும், சம்பந்தப்பட்டவர்கள் மீது பாகுபாடு இல்லாமல் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கும் ஏற்றவாறு சைபர் குற்றப்பிரிவு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

4) குற்றவாளிகள் தண்டனை பெறும் விகிதம்குறைவாகவே நீடிப்பதற்கான முக்கிய காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக,காவல்துறையின் விசாரணை முறை மற்றும் அணுகுமுறையில் ஆணாதிக்க பார்வை உள்ளிட்ட குறைபாடுகள், நீதிமன்றத்தில் ஏற்படும்நீண்ட காலதாமதம் உள்ளிட்ட சிக்கல்களின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.5) மதுபானக் கடைகளைப் படிப்படியாக மூடும்நடவடிக்கையை எடுக்க வேண்டும். 6) இக்குற்றங்களுக்கு தீர்வு காணும் அதிகாரம்பெற்ற அனைத்து துறையினருக்கும் பாலின நிகர்நிலை பயிற்சி தொடர்ச்சியாக அளிக்கப்பட வேண்டும். 7) குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் சமூக செய்திகள் அடங்கிய ஊடக விளம்பரங்களை, தமிழக அரசு ஊடக நிறுவனங்களோடு ஒருங்கிணைந்து வெளியிட வேண்டும். பாடத்திட்டத் தின் ஒரு பகுதியாக பாலின சமத்துவம் இடம்பெறவேண்டும்.  8) சட்ட அந்தஸ்து பெற்ற மகளிர் ஆணையம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் போன்றவற்றின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, மகளிர் காவல் நிலையங்களை மேம்படுத்துவது, வரதட்சணை தடுப்புப் பிரிவு மற்றும் குழந்தை திருமண தடுப்புப் பிரிவு போன்ற அரசு துறைகளை நவீனப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

நீதி பரிபாலன முறைமையை (Justice delivery system) மேம்படுத்தாமல், அதன்கட்டமைப்பை வலுப்படுத்தாமல், தவறிழைக்கும்அல்லது முறையாக விசாரிக்க மறுக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களது பதில் சொல்லும் பொறுப்பை (Accountability) உறுதிப்படுத்தாமல் தண்டனைகளை மட்டும் அதிகப்படுத்திக் கொண்டே போவது பலன் தராது எனக் கருதுகிறோம். முறையான விசாரணை, சாட்சிகள் பாதுகாப்பு,கால வரையறையோடு கூடிய  தீர்ப்பு போன்றவற்றை உறுதிப்படுத்துவதே  முன்னுரிமை நடவடிக்கைகளாக  இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;