tamilnadu

img

வாடகை பாக்கி செலுத்தாத 2 கடைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சீல்

வாடகை பாக்கி செலுத்தாத 2 கடைகளுக்கு  இந்து சமய அறநிலையத்துறை  சீல்

கடலூரில் ரூ.43 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாததால் இரண்டு கடைகளுக்கு இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். கடலூர் புதுப்பாளையம், ராஜகோபால சாமி கோயிலுக்கு சொந்தமாக கடலூரில் ஏராளமான நிலங்கள் உள்ளன. அதன்படி கடலூர் லாரன்ஸ் ரோட்டில் பேருந்து நிலையம் எதிரில் உள்ள இடத்தில் ஒரு மெடிக்கலும், காலனி மற்றும் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் உள்ளது. பல ஆண்டுகளாக அங்கு கடை நடத்திவரும் உரிமையாளர் கோயில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் ரூ.43 லட்சம் வாடகை பாக்கி இருந்துள்ளது. இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் கடை உரிமையாளருக்கு பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் வாடகை பாக்கியை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோயில் நிர்வாகத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் கடை உரிமையாளர் வாடகையை செலுத்த வேண்டும் என்றும், இல்லை என்றால் கடையை அங்கி ருந்து காலி செய்யவும் இந்து சமய அற நிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. அதன்படி இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள்  காலை கடை உரிமை யாளரிடம் கடையை காலி செய்ய கூறினர். ஆனால் கடை உரிமையாளர் காலி செய்யாததால் இந்து சமய அற நிலைத்துறை அதிகாரிகள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கடை யின் இருந்த பொருட்களை வெளியே எடுக்க முயற்சித்தனர். அப்போது வந்த கடை ஊழியர்கள் கடையில் உள்ள பொருட்களை தாங்களே அகற்றிக் கொள்ள அவகாசம் வேண்டும் என்றும் கேட்டனர். இதனால் அதிகாரிகளுக்கும் கடை ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு 2 கடைகளுக்கும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.