மக்கள் குறைதீர்வு கூட்டம்: 668 மனுக்கள்
திருவண்ணாமலை, ஜூன் 9 - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மை துறை சார்ந்த பயிர்க்கடன்கள், புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்ககளில் பயிர் கடன்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 528 மனுக்கள் பெறப்பட்டது. செய்யாறு சாராட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 94 மனுக்களும், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 46 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. தலைமைக் காவலர்கள் இடமாற்றம் விழுப்புரம், ஜூன் 9 - விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர்கள் தேவநாதன், தீனதயாளன். இவர்கள் இருவரும் கஞ்சா கடத்தல், விற்பனை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தொடர்பாக உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனுக்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தலைமைக் காவலர்கள் தேவநாதன், தீனதயாளன் ஆகியோர் விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை காவல் பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டார். இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் பலி சிதம்பரம், ஜூன் 9- சிதம்பரம் சி. கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தையா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன்(40).இவர் நெய்வேலி என்.எல்.சி யில் ஊழியராக வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் சிதம்பரத்திலிருந்து -புவனகிரி செல்லும் புறவழிச் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். வயலூர் அருகே சென்ற போது எதிரில் வந்த சுந்தரேசன் (47), என்பவர் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் சம்பவ இடத்திலேயே ராமநாதன் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் தாலுகா காவல்துறையினர், சுந்தரேசனை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயர்நீதிமன்றத்தில் ஆஜரான சென்னை காவல் ஆணையர்: நீதிபதி சரமாரியாக கேள்வி சென்னை, ஜூன் 9 - நொளம்பூரில் சாதிரீதியான அவமானகரமான கருத்துகள் பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் வானமாமலை என்ற பட்டியலினத்தவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், சென்னை காவல் ஆணையர் அருண்குமாரை நேரில் ஆஜராக உத்தரவிட்டார். நீதிபதி கடும் கண்டனை தெரிவித்து, 2024 ஜூலையில் பாரதிய நியாய சம்ஹிதை அமலுக்கு வந்ததற்கு முன்னர் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவான ஆயிரக்கணக்கான வழக்குகள் தமிழ்நாடு முழுவதும் நடவடிக்கையின்றி கிடப்பில் உள்ளன என்று கூறினார். சென்னை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் 2024 ஜூன் வரை நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், புலன் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகள், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத வழக்குகள் ஆகிய விவரங்களை ஜூலை 8ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். நீதிபதி புலன் விசாரணை அதிகாரிகளை கோவில் விழா, அரசியல் கூட்டம் போன்ற பந்தோபஸ்து பணிகளுக்கு பயன்படுத்தாமல் புலன் விசாரணை பணிக்கே ஈடுபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மினி பேருந்து வாங்கி தருவதாக கூறி மோசடி: ஒருவர் கைது
அம்பத்தூர், ஜூன் 9 - மினி பேருந்து வாங்கி தருவதாகக் கூறி ரூ.18.6 லட்சம் மோசடி செய்த வழக்கில் டிராவல்ஸ் உரிமையாரை காவல் துறையினர் கைது செய்தனர். பட்டாபிராம் கிழக்கு கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக். இவர் ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கார்களுக்கான வாட்டர் வாஷ் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு ஆவடி சரஸ்வதி நகர் 2ஆவது தெருவை சேர்ந்த வெங்கடேஷ் அவரது மகன் ரோகித் ஆகியோர் கார்களை வாட்டர் வாஷ் செய்வதற்கு வருவார்கள். அப்போது அவர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெங்க டேஷ், மகனுடன் சேர்ந்து டிராவல்ஸ் நடத்தி வருவதாகவும் மேலும் கார், வேன்களையும் விற்பனை செய்து வரு வதாக கூறியுள்ளார். அவரது வார்த்தையை நம்பிய அபிஷேக், தனக்கு மினி பேருந்து ஒன்று வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து மினி பேருந்து வாங்க பல்வேறு தவணைகளாக ரூ.27.10 லட்சம் பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் மினி பேருந்து வாங்கித் தராமல் காலதாமதம் செய்துள்ளனர். இதையடுத்து பணத்தை திரும்பக் கேட்டபோது ரூ.8.50 லட்சம் பணத்தை மட்டும் திருப்பி கொடுத்துள்ளனர். மீதி பணமான ரூ.18.60 லட்சத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர்.இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வெங்கடேசனை கைது செய்து, புழல் சிறை யில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரோகித்தை தேடி வருகின்றனர்
மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை திறப்பு
ராணிப்பேட்டை, ஜூன் 9 - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலு வலகத்தில் திங்களன்று பள்ளி கல்வித் துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணாக்கர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா திறந்து வைத்தார். மாணவர்களின் விருப்பம் மற்றும் தகுதிக்கு ஏற்ப, எந்த வகையான உயர் கல்வி பாடப்பிரிவு மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுக்கலாம் என்பது சார்ந்த ஆலோ சனைகள் வழங்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற தொழில் சார்ந்த படிப்புகள் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உயர்கல்வி சார்ந்த உதவிகள், ஆலோ சனைகள், கலை மற்றும் அறிவியல், பாலி டெக்னிக் மற்றும் ஐடிஐ கல்லூரிகளில் காலி பணியிடங்கள் சார்ந்த விபரங்கள் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை வாயிலாக வழங்கப்படும். கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 4வது தளம் பி பிளாக் செயல்படுகிறது. மேலும் விபரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-1077, 97509 82716, 94890 76531, 9750982716 என்ற வாட்ஸ்அப் எண்ணில் நேரடியாகவும் தொடர்பு கொண்டு மாணாக்கர்கள் ஆலோசனைகள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்