tamilnadu

img

ஆணவக் கொலை விழிப்புணர்வு தொடர்பாக உயர்நீதிமன்றம் கருத்து

ஆணவக் கொலை தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொதுவெளியில் நடந்தால் தான் மக்களை சென்றடையும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு உடுமலையில் சங்கர் என்பவர் கெளசல்யா என்பவரை காதலித்து சாதி மறுப்பு  திருமணம் செய்து கொண்டார். இதனால் சங்கர்  பெண் வீட்டாரால் உடுமலையில் நடுரோட்டில் வெட்டி ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவாக உருவாக்கப்பட்ட சங்கர் சமூகநீதி அறக்கட்டளை சார்பாக கெளசல்யா தொடர்ந்த வழக்கில் சங்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவேந்தல், சாதி மறுப்பு, திருமண விழிப்புணர்வு கூட்டம் போன்றவற்றை நடத்த அனுமதியளித்தும், உரிய பாதுகாப்பு வழங்கவும் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.