tamilnadu

img

சென்னையில் கொட்டி தீர்த்த மழை பல இடங்களில் போக்குவரத்து நெரில்

சென்னை, செப்.19-  தென் மேற்கு பருவமழை வட கிழக்கு மாநிலங்கள், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தீவிரமாகி உள்ளது. வங்கக் கடலின் மத்திய மேற்கு பகுதியில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக ஆந்திர எல்லைப்பகுதி மற்றும் தெலுங்கானா வரை நீண்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணா மலை உள்பட வட தமிழகத்தில் புதனன்று (செப்.19) பலத்த மழை பெய்தது. சென்னையில் நள்ளிரவு 1 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.  மேலும்  இடைவிடாது இடி மின்னலு டன் மழை பெய்து கொண்டே இருந்தது. வியாழனன்று (செப்.29) காலையிலும் மழை தொடர்ந்து பெய்தது. சென்ட்ரல், எழும்பூர், தி.நகர், மயிலாப்பூர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, மாதவரம், புழல், அம்பத்தூர், ஆவடி, முகப்பேர், கோயம்பேடு, வடபழனி, பூந்தமல்லி, குன்றத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, மேடவாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, சோழிங்கநல்லூர், நீலாங்கரை, திருவான்மியூர், ராயபுரம், காசிமேடு, கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கொரட்டூர், அண்ணாநகர் உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்க ளில் செல்வோர் சிரமப்பட்டு சென்ற னர்.  காலை 7 மணியில் இருந்து 8 மணிவரை விடாமல் மழை பெய்த தால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மழையில் நனைந்த படியே சென்றனர். பாரிமுனை சாலையில் முழங்கால் அளவுக்கு மழை நீர், குளம் போல் தேங்கி நின்றதால்  இரு சக்கர வாகனங்கள் தண்ணீரில் சிக்கி மூழ்கின.  இதேபோல் தம்புச்செட்டி தெரு, செம்பு தாஸ் தெருவிலும் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கி யது. பாரிமுனை ரிசர்வ் பேங்க் சுரங்கப்பாதை, எழும்பூர், சேத்து ப்பட்டு ஸ்கூல் சாலை, வியாசர்பாடி, தி.நகர், ஆதம்பாக்கம், பல்லாவரம், அம்பத்தூர் பால்பண்ணை, கோயம்பேடு, அண்ணாநகர் சிந்தா மணி, பகுதியில் உள்ள சாலைகளி லும் அதிகளவு தண்ணீர் தேங்கியது. கீழ்ப்பாக்கம் தாசப் பிரகாஷ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு வழிப்பாதையில் மழை நீருடன் சாக்கடை தண்ணீரும் தேங்கி கிடந்ததால் அந்த பகுதியை கடந்து செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டது. சென்னையில் வியாழனன்று  காலை 8.30 மணி நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.

;