தமிழகத்தில் அக்.9 வரை கனமழை
சென்னை, அக். 5 - தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தை ஒட்டிய பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேரடியாக பாதிப்பு இல்லை. எனினும், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாகவும், வடக்கில் இருந்துவரும் வெப்பக் காற்று காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 9 வரை புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி. ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தருமபுரி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி மீது வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் புகார்
சென்னை, அக்.5 - வழக்கு விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் பி. வில்சனிடம் கடிந்துகொண்ட நீதிபதியைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகி கள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்துள் ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி வழக்கறிஞர்கள் கூட்ட மைப்புத் தலைவர் என்.மாரப்பன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட வழக்க றிஞர் சங்க நிர்வாகிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
அதில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஆர். சுப்பிரமணியன், காணொ லியில் மூத்த வழக்கறிஞர் வில்சனை மிகவும் கண்ணி யக்குறைவாக நடத்தியுள் ளார். அவரது செயல், பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் செயல். நீதிப் பரிபாலனத்தில் நீதிபதிகளும், வழக்கறி ஞர்களும் ஒரு தேரின் இரு சக்கரங்கள் என்றும், நாண யத்தின் இரு பக்கங்கள் என்றும் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நீதிபதிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால், அது குறித்து புகார் அளிக்க குறைதீர்ப்பு நடைமுறையை சென்னை உயர் நீதிமன்றத் தில் கொண்டு வரவேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ள னர். மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னை,அக்.5- எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன் னெச்சரிக்கை நடவடிக்கைக ளையும் தமிழ்நாடு மின் உற் பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எடுத்துள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மின்சாரம் தொடர் பான புகார்களுக்கு 24 மணி நேரமும் 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம் என்றும் அவர் கூறி னார்.