சென்னையில் நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருவதால் சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மயிலாப்பூரில் 20 செ.மீ மழை பதிவாகி உள்ளது. விடிய விடிய சென்னையின் பல பகுதிகளில் கன மழை பெய்துள்ளதால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் மாநகரம் முழுவதும் போக்கு வரத்து நெரிசல் காணப்படுகிறது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்றும் சென்னையில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.