tamilnadu

ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்

சென்னை,டிச.30- காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று தமிழக பொது  சுகாதாரத் துறை இயக்குநர் செல் வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

கோவா, மகாராஷ்டிரா, கர் நாடகா, தெலுங்கானா, கேரளத்தை  தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் ஜே என்1 வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை ஒன்றிய சுகாதாரத்துறை வழங்கி யுள்ளது.

குறிப்பாக, அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோத னைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் அறிகுறிகள் உள்ளோருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோ தனை நடத்துமாறு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டார். 

அதன்படி, தினமும் 350-க்கும்  மேற்பட்ட பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் யாருக்கெல்லாம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தல் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு செல்வவிநாயகம் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “காய்ச்சல், சளி, தொண்டை வலி,  மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், உறுப்பு  மாற்று சிகிச்சை மேற்கொண்டவர் களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

தொற்று உறுதி செய்யப்பட்ட வர்களின் தொடர்பில் இருந்த வர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர நுரையீரல் தொற்றுக்குள்ளானவர்கள், இன்ஃப்ளூயன்சா போன்ற பாதிப்புக் குள்ளான வர்களுக்கும் பரிசோ தனை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.