tamilnadu

img

ஒரு டுவிட் போட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டவர் எச்.ராஜா... அமைச்சர்

சென்னை:
அதிமுக அரசு ஆண்மையுள்ள அரசு என்றும் வரலாறு தெரியாமல் சிலர் இன்றைய தலைமுறையை ஏமாற்றி வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கர்நாடக அரசு விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டி,  பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா ட்வீட் செய்திருந்தார். அதில் ‘கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு’ என்று எழுதியிருந்தார்.இது கடும் விமர்சனத் திற்கு ஆளானது. தமிழக அரசை ஆண்மையற்ற அரசாக கூறியதாக எச்.ராஜாவை சமூக வலைதளங்களில் விமர்சித்தவண்ணம் உள்ளனர்.எச்.ராஜாவின் டுவிட்டர் பதிவுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:எச்.ராஜாவின் ஆண்மை குறித்து அனைவருக்கும் தெரியும். ஒரு டுவிட்டர் பதிவை போட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டவர் எச்.ராஜா. அதிமுக அரசு ஆண் மையுள்ள அரசு. வரலாறு தெரியாமல் இன்றைய தலைமுறையை ஏமாற்றி வருகிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவில் நீதிமன்ற அறிவுரைகளை பின் பற்றுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

;