சென்னை, ஜூலை 30- தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக கூறி, பிறப்பிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் புதனன்று தீர்ப்பளிக்க உள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட் களைக் கொண்டுவந்தது தொடர் பாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வ ருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக உரி மை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப் பட்டது.
இந்த நோட்டீஸை, உயர் நீதி மன்றம் தொடர்ச்சியாக இருமுறை ரத்து செய்திருந்த நிலையில், அதை எதிர்த்து அதிமுக ஆட்சியில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.கும ரப்பன் ஆகியோர் அடங்கிய அமர் வில் செவ்வாயன்று மீண்டும் விசா ரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதிட்டார்.
“தற்போது உள்ள சட்டப் பேரவை இந்த குட்கா விவகாரம் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்த முடியாது. அரசியல் உள் நோக்கத்துடன் உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ஏற்கனவே உயர் நீதிமன்றம் இருமுறை ரத்து செய்துள்ளது. எனவே இந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.
இருதரப்பு வாதங்களும் முடி வடைந்த நிலையில், புதன்கிழமை (ஜூலை 31) நீதிபதிகள் தீர்ப்பளிக் கின்றனர்.