tamilnadu

img

குரூப்-4 சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

சென்னை,பிப்.16 கடந்த 12ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளி யிட்ட அறிவிப்பில், குரூப்-4 தேர்வுக்கு தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் 18ம் தேதிக்குள் தேர்வாணைய இணைய தளம் மற்றும் அரசு இ-சேவை மையத்தில் சான்றிதழ்களை  பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்ப ட்டிருந்தது.ஏற்கெனவே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்கள் மீண்டும் பதி வேற்றம் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் யாரும் தங்களது சான்றி தழ்களை  மீண்டும் பதிவேற்றம் செய்யத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.