சென்னை,பிப்.2- டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வரும் காவலர் சித்தாண்டி மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள் ளது. கடந்த ஆண்டு நடை பெற்ற குரூப் 4 தேர்வு முறை கேடு தொடர்பாக டிஎன் பிஎஸ்சி அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக தனியாக வழக்குப் பதிந்து சிபிசிஐடி வெள்ளியன்று விசாரணை யைத் துவக்கியது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர் பாக நடந்த விசாரணையில் சிவகங்கையைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர் தனது மனைவி உள்ளிட்ட நான்கு உறவினர்கள் குரூப் 2ஏ தேர்வில் முறைகேடாகத் தேர்வு பெற இடைத்தரகர்கள் மூலம் பணம் அளித்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. எனவே அந்த தேர்விலும் முறைகேடுகள் நடந்திருக்க லாம் என்று புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக தனியாக டிஎன்பிஎஸ்சி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி விசாரணையைத் துவக்கியுள்ளது. முறை கேட்டில் ஈடுபட்டதாக டிஎன்பிஎஸ்சி முதல்கட்ட மாக அளித்த 42 பேரின் பட்டியலை அடிப்படை யாகக் கொண்டு விசாரணை நடைபெறும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஎன்பி எஸ்சி குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வரும் காவலர் சித்தாண்டி மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது.