tamilnadu

img

வினா-விடை போட்டி

சென்னை,மே 2-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழும்பூர் - பெரியமேடு கிளை சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ‘சுவாசிப்போம் - வாசிப்போம்’ என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக ‘சிலந்தியும் - ஈயும்’ புத்தகத்திலிருந்து வினா-விடை போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பெரியமேட்டில் நடைபெற்றது.வாசிப்புத் தேர்வு மற்றும் விளையாட்டுப்போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், “அம்பேத்கர் பல புத்தகங்களை ஆய்வு செய்து அறிவியல் பூர்வமாக தொகுக்கப்பட்ட கட்டுரையை திருத்த முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். இந்தக் கட்டுரைதான் ‘சாதி ஒழிப்பு பற்றி’ மிகச் சிறந்த புத்தகமாக வெளிவந்தது” என்றார்.தூக்குமேடை ஏறுவதற்கு முன்பு வரை மாவீரன் பகத்சிங் வாசித்தது தோழர் லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ என்றநூல். பகத்சிங் தூக்கில்இடப்படாமல் இருந்திருந்தால் அவர் வாழ்நாளில் இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்தில் முக்கியமான தலைவராக பரிணமித் திருப்பார் என்றும் குறிப்பிட்டார். ஜனசக்தி, தீக்கதிர் நாளிதழ், மார்க்சிஸ்ட், செம்மலர் இதழ்கள், டெல்லி லெப்ட்வேர்டு, பாரதிபுத்தகாலயம் பதிப்பகங்கள், இந்தியா வில் வகுப்புவாதம் குறித்தான புரிதல்,பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது என்றும் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.இந்த விழாவிற்கு நா.மனோகரன் தலைமை தாங்கினார். ம.பாலு வரவேற்றார். சிபிஎம் பகுதிச் செயலாளர் கே.முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ரா.சரளா, க.ராஜாமணி, வி.ஆறுமுகம், வே.ஜெயகோபால், பி.சக்திவேல், ஏ.நாகராணி, பி.கே.மூர்த்தி ஜி.கார்த்திக், சிறீகாந்த் ஆகியோர் பங்கேற்று பேசினர். ஜி.வெங்கடேசன் நன்றி கூறினார்.