tamilnadu

அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு பயணிகள் கவனத்திற்கு!

சென்னை, டிச. 31- அரசு விரைவு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பய ணத்தை மேற்கொள்ளுமாறு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து பிற ஊர்க ளுக்கும், பிற ஊர்களில் இருந்து  சென்னைக்கும் வந்து செல்லும் பேருந்து நகரத்துக்குள் இயங்கு வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இதையடுத்து இதற்கு மாற்று  ஏற்பாடாக வண்டலூர் அடுத்த கிளாம் பாக்கத்தில் ரூ. 400 கோடி செலவில் 88 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு, முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (டிச. 31) முதல் இந்த பேருந்து நிலையம் பொதுமக்களின் பயன் பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் கோயம் பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்த  பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற் கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து கள், கோயம்பேடு பேருந்து நிலை யத்திற்கு பதிலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க ப்படும். டிசம்பர் 31 முதல் ஜனவரி 30 வரை பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

கும்பகோணம், சேலம் 
அதே சமயம் விழுப்புரம், கும்ப கோணம் மற்றும் சேலம் மாவட்டங் களுக்கு செல்லும் பேருந்துகள் ஜனவரி 15ஆம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து இயங்கும். மேலும் பெங்களூரு நெடுஞ்சாலை, ஈசிஆர் வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பேருந்து கள் வழக்கம் போல் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டி கைக்கு பின் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்து கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலை யத்தில் இருந்து புறப்படும் என்றும் அறி விக்கப்பட்டுள்ளது.