தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்வதற்கான மசோதா மற்றும் கனிமங்களை கொண்டுள்ள நிலத்துக்கு வரி விதிப்பதற்கான மசோதா ஆகியவற்றுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அவர்களின் பதவிக் காலம் 2024-ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தது. அதற்கு பின்னர் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், குறிப்பிட்ட மாவட்டங்களில் அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்வதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களில் இருக்கும் நிறைய நிலங்களில் கிரானைட் உள்ளிட்ட கனிமங்கள் இருக்கின்றன. இந்த நிலங்களுக்கு வரி விதித்து அரசுக்கு வருவாயை உயர்த்தும் விதமாக சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த 2 மசோதாக்களுக்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.