tamilnadu

img

தமிழக ஆளுநரா? பாஜக தலைவரா? சாட்டையை சுழற்றும் முன்னாள் நீதிபதி சந்துரு

நீட் தேர்வு விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது குறித்து ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சந்துரு தனது முகநூல் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அதற்கான ஒப்புதலை குடியரசு தலைவரிடம் பெற மசோதா ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், தமிழக ஆளுநர் 5 மாத காலமாக மசோதா குறித்து எந்த தகவலும் தெரிவிக்கலாமலும், குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கலாமலும் காலம் தாழ்த்தி வந்தார்.

தற்போது, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நீட் விலக்கு மசோதாவை சட்டப்பேரவையில் மறு ஆய்வு செய்ய வலியுறுத்தியும், நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளது என்றும், இம்மசோதா கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது என்றும் கூறி ஆளுநர் மாளிகை பிப்ரவரி 1 ஆம் தேதி மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளது.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு மாணவர்கள், அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் வலுவான கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் நீதிபதி சந்துரு தனது முகநூல் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், தமிழ்நாடு ஆளுநர் 4 ஏம்.எல்.ஏக்களுக்கு கட்சி தலைவரா? 234 உறுப்பினர்கள் கொண்ட அவையை அவமதிப்பவரா? என சாட்டையை சுழற்றியுள்ளார்.