tamilnadu

img

பஞ்சப்படி கேட்ட அரசு ஊழியர்களுக்கு பஞ்சுமிட்டாய் வழங்கும் மத்திய நிதியமைச்சர்.... எம்.துரைப்பாண்டியன் குற்றச்சாட்டு

சென்னை:
பஞ்சப்படி கேட்ட அரசு ஊழியர்களுக்கு பஞ்சு மிட்டாய் வழங்கும்மத்திய நிதியமைச்சர் என மத்திய அரசு ஊழியர் மகா சம்மேள னத்தின் பொதுச் செயலாளர் எம்.துரைப்பாண்டியன் குற்றம்சாட்டி யுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சமீபத்திய அறிவிப்புகள் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களை கோபத்திலும், ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது. உங்களின் இந்த அறிவிப்புகளை மத்திய அரசு ஊழியர்கள்,  ஏற்கனேவே நீங்கள் அறிவித்த வெற்று அறிவிப்பான சாமானிய மக்களுக்கு பயன்தராத  ரூ.20  லட்சம் கோடி தொகுப்பு நிதியாகத்தான் பார்க்கிறார்கள்.மத்தியஅரசு ஊழியர்களின் ரூ. 37,530 கோடி அகவிலைப்படியை பறித்துக் கொண்டதினால் சேமித்த  தொகையை திரும்ப வழங்கி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை விட்டுவிட்டு, மாதந்தோறும் ஊழியர்கள் குறைந்தபட்சம் 1,260 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரையும், ஓய்வூதியதாரர்கள் 630 ரூபாய்முதல் 3500 ரூபாய் வரை இழந்துகொண்டிருக்கும் நிலையில், வழக்கமாக அறிவிக்கப்படும் பண்டிகை கால போனஸ் தொகையையும் இன்னும் வழங்காமல், அடிப்படை ஊதியத்தை பண்டிகைக்கால முன்பணமாக வழங்கக்கோரும் எங்களது நீண்டகால கோரிக்கையையும்  மறுத்துவிட்டு, வெறும் 4,000 கோடி கடன் அறிவிப்பை வெளியிட்டிருப்பது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. 

மக்களின் வாழ்க்கைத்தரம் தெரியாத அமைச்சர்
எப்படி மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய   ஜி.எஸ்.டி. பங்குத் தொகையை வழங்காமல் கடன் வாங்கிக் கொள்ளச் சொன்னீர்களோ, அதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு ஊழியர்களுக்கான உங்களது இத்தகையகடன் அறிவிப்புகள், வெகு விரைவில் மாத ஊதியத்திற்கு பதிலாக கடன் வழங்க உள்ளோம் என்ற உங்களின் வருங்கால அறிவிப்பிற்கு முன்னோடியாக உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.மேலும், அரசு ஊழியர்களின் இன்றைய  நிலைமை தெரியாமல் 2 லட்சத்து 94 ஆயிரத்து 015 ரூபாய் செலவழித்து 1 லட்சத்து 34 ஆயிரத்து 015 ரூபாய் சேமிக்கச் சொல்லும் உங்களது பயணக்கால சலுகை அறிவிப்பானது, நாட்டின் பொருளாதார சூழ்நிலையும் இந்திய மக்களின் இன்றைய வாழ்கைத்தர மும்  தெரியாமல் கார்ப்பரேட்டு களுக்கான  உலகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு எள்ளளவும் உதவாத உங்களின் இந்த அறிவிப்புகளை மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.