tamilnadu

img

செய்தி வாசிப்பாளர் வரதராஜனை கைது செய்ய அரசு தீவிரம்

சென்னை:
அரசு மருத்துவமனையின் படுக்கை வசதிகள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

“சென்னையில் கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்ட எனது உறவினர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமல் அவதிப்பட்டனர். மேலும், அங்கு குறைவான படுக்கை வசதி இருந்தது. எனவே பொதுமக்கள் வீட்டிலேயே இருங்கள்” என்று கூறி முன் னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் காணொலி ஒன்றை வெளியிட்டார். அந்தக் காணொலி சமூகவலைதளங்கள் வைரலாகப் பரவியது.அது தொடர்பாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், 
“சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் போதுமான அளவு இருப்பதாக தெரிவித்தார்.  வரதராஜன் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்நிலையில், வரதராஜன்  உறவினர் ஒருவர் கொரோனா சிகிச்சைப் பெற்று நலமாக இருப் பதாகவும் மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல் பட்டு வருவதாகவும் கூறி மற் றொரு காணொலியைப் பதிவிட்டிருந்தார்.இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அவதூறு பரப்பியதாக முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அவர் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து வரதராஜன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

;