சிதம்பரம்,மே.12-கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட கூடுவெளிச்சாவடி கிராமத்தை சார்ந்த முத்துக்குமரன். அதே கிராமத்திலுள்ள தனது 40 ஏக்கர் நிலத்தை கடந்த 15 வருடத்திற்கு முன் ஆதிதிராவிடமக்களின் சமூக வளர்ச் சிக்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று அரசுக்கு தானமாக எழுதிகொடுத்துள்ளார். அந்த இடத்தில் அரசு தொழிற்நுட்ப கல்லூரி கட்ட வேண்டும் என்று காட்டுமன்னார்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சிதம்பரம் தொகுதி முன்னாள் சட்ட மன்றஉறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், தற்போதைய காட்டு மன்னார்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் முருகுமாறன் ஆகியோர் சட்டமன்றத்தில் வலியுறுத்தினர். பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.அதனைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப் பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக ஆதிதிராவிட மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்ட சாமி சகஜானந்தா பெயரில் தொழிற்நுட்ப கல்லூரி சிதம்பரம் முத்தையா தொழிற்நுட்ப கல்லூரியின் வளாகத்திலுள்ள கட்டிடத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதில் 150-க்கும் கூடுதலான மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்நிலையில் கூடுவெளிச்சாவடியில் 4 ஏக்கரில் ரூ24 கோடி செலவில் நவீன வசதிகளுடன் சகஜானந்தா தொழிற்நுட்ப கல்லூரிக்கு கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வருகிறது.இதில் தொழிற்கூடம், கல்வியறை கூடம், உடற்பயிற்ச்சி கூடம் உள்ளிட்டவை தனித்னியாக 7 வகையான கட்டிடங்கள் கட்டப்படு கிறது. இதில் ஒரு கட்டிடம் 4 அடுக்கில்ஆள்தூக்கி வசதியுடன் அமைக்கப்படுகிறது. இந்த மாத இறுதியில் மேல்தளம் காங்கிரீட் போடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை பொதுப்பணித்துறை கட்டிடங்கள் பிரிவு கோட்ட பொறியாளர் மணிவண்ணன் தலைமையிலான பொறியாளர்கள் கண்காணித்து வருகிறார்கள். இங்கு அமையவிருக்கும் தொழிற்நுட்ப கல்லூரியால் சுற்றுவட்டத்திலுள்ள கிராமப் புற மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விரைவில் இதன் அருகே மாணவர்களுக்கு விடுதியும் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.