மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
திருவள்ளூர், ஜூன் 13- திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அமைக்கப் பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக திரு வள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிக்கு, சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ். கோபால் அனுப்பியுள்ள கடி தத்தின் சுருக்கம் வருமாறு:
மாவட்ட மருத்துவ மனையில் உள்ள கொரோனா வார்டில் வெள்ள வேடு மேல்மனம்பேட் டையை சேர்ந்த 67 வயது முதியவர் சிகிச்சை பெற்று வந்தார். ஜூன் 11 அன்று அவர் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மாவட்ட நிர்வா கத்தின் மீது மக்களுக்கு ஒரு விதமான அச்சம் ஏற்பட்டுள் ளது. மருத்துவர்கள், செவி லியர்கள், ஊழியர்கள் என பணிபுரியும் இடத்திலும் அச்சம் நிலவுகிறது. இந்த சம்பவம் பல கேள்விகளை யும், சந்தேகத்தையும் எழுப்பு கிறது. சிறப்பு வார்டில் நோயாளி களை கண்காணித்து, சத்தான உணவு வழங்கி, கனி வோடு நடத்தி, நம்பிக் கையை ஏற்படுத்த போதிய ஊழியர்கள் இல்லை. மருத்து வர்கள், செவிலியர்களும் சுழற்சி முறையில் பணியில் பணியாற்றுவதை உறுதி படுத்தி இருந்தால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்திருக்காது.
சிறப்பு வார்டில் வர வேற்பறை இல்லை. நோயா ளிகளின் உறவினர்களுக்கு, பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பதற்கு கூட பிர தான நுழைவு வாயிலில் இரவு காவலர்கள் இல்லை. நோயாளிகளுக்கு துப்புரவு பணியாளர்கள் மூலம் உணவு கொடுப்பதாக தெரி கிறது. சிறப்பு வார்டில் பணி யாற்றும் மருத்துவர்கள், செவிலியர், ஊழியர்கள் குறைந்த அளவே உள்ளதை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா வார்டில் நோயா ளிகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். தற்போதுள்ள வார்டில் 110 படுக்கைகள் மட்டும் உள்ளது. இதனை அதிகரித்து, திருத்தணி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதி களிலிருந்து வரும் நோயாளி களையும் அனுமதிக்க வேண்டும்.
மாவட்டத்தில் 1752 பேருக்கு தொற்று ஏற்பட்டுள் ளது. எனவே தொற்று பர வலை தடுக்க மாவட்ட நிர்வா கம் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய 3 கொரோனா சிறப்பு வார்டு களில் பணியாற்றும் மருத்து வர்கள் உள்ளிட்ட பணி யாளர்களுக்கு தேவையான கவச உடைகளை வழங்க வேண்டும். அதேசமயம், மாவட்ட தலைமை மருத்துவமனை யில் கொரோனா சிறப்பு வார்டு உள்ளதை காரணம் காட்டி, பிரசவம் மற்றும் இதர நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கக் கூடாது. அதேசமயம் மருத்துவ மனைக்கு வந்த செல்பவர்க ளுக்கு, தொற்று ஏற்படாத வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடி தத்தில் கூறப்பட்டுள்ளது.