tamilnadu

அரசே விளை பொருட்களை கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

ராணிப்பேட்டை, ஜூலை 27- ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல் உற்பத்தி அதிகளவில் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் நெல் கலவை, அம்மூர், காவேரிபாக்கம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்லப் பட்டு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது. அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் குவிண்டால் நெல் சன்ன ரகத்திற்கு 1,900 ரூபாயும், மோட்டா ரகத்துக்கு 1,850 ரூபாயும் அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் எடுத்து வரக்கூடிய நெல்லுக்கு வியாபாரிகள் 700 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை மட்டுமே கொடுத்து வாங்குகின்றனர். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம்  கலவை  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயி களிடமிருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் திங்களன்று கலவை விற்  பனை கூடத்தில் கொள்முதல் விலை 750 ரூபாய் முதல் 800 ரூபாய் என்று அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டதால் விவசாயிகள் நெல் விற்பனையை நிறுத்தி வைத்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடி தத்தில்  கொரோனா நோய் தொற்றின்  காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப் பட்டதால் விவசாயிகள் வாவாதாராத்தை இழந்து தவித்து வரும் நிலையில், வியாபாரி கள் விவசாயிகள் வயிற்றில் அடிப்பது தொடர்கதையாய் உள்ளது. எனவே ஆட்சியர்  தலையிட்டு விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.