சென்னை, மே1- கொரோனா பாதிப்பு சென்னையில் கடுமையாக உயர்ந்து வருகிறது. சமூக தொற்றாக பரவிவிட்டதால் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்த வண்ணம் உள்ளன. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இல்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார். சென்னையில் ஏற்கனவே தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப் படும் நிலையில், தற்போது பணிகள் மேலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை, வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்களை, சமூக விலகலை கடைபிடித்து தங்கவைக்க ஏதுவாக சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தவிரவிட்டுள்ளது. சென்னை கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்துவரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வ தற்காக சென்னை பள்ளிகள் மட்டுமல்லாது, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளையும் மே 2ஆம் தேதிக்குள் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.