சென்னை,ஜூலை 18- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத் தினருக்கு வாடகையில்லாமல் வீடு வழங்க அரசு தயாராக உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு பேசிய, நாகை தொகுதி உறுப்பினர் தமிமுன் அன்சாரி, “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு சார்பில் வீடு ஒதுக்கி தரப்படுமா எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “மூத்த அரசியல்வாதி கக்கனுக்கு 1971 ஆம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்ததையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வர் நல்லக்கண்ணுவுக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்ததையும் சுட்டிக் காட்டினார். பழைய குடியிருப்புகளை இடித்து விட்டு, புதிய கட்டி டங்களை கட்ட குடியிருப்புத்தாரர்களுக்கு நோட்டீஸ் அனுப் பப்பட்டதை தொடர்ந்து நல்லகண்ணு தாமாக முன்வந்து காலி செய்தார். அதன்பிறகு, தானே நல்லக்கண்ணுவை தொலை பேசியில் தொடர்பு கொண்டு, அதிகாரிகள் மூலம் வீடு வழங்குவ தாக தெரிவித்ததாகவும் துணை முதல்வர் கூறினார். ஆனால் கக்கன் குடும்பத்தினர் தொடர்ந்து அங்கேயே தான் வசித்து வருகின்றனர் எனக் கூறினார். கக்கன் குடும்பத்தினர் மற்றும் நல்லகண்ணு ஆகியோருக்கு மாத வாடகையின்றி வீடு வழங்க அரசு முன்வரும் என தெரிவித்த அவர், கக்கன் குடும்பத்தினரை பலவந்தமாக அரசு வெளியேற்றியது என ஊடகங்களில் வரும் செய்திகளில் உண்மையில்லை எனவும் தெரிவித்தார்.