tamilnadu

img

சென்னை விமான நிலையத்தில் ரூ 18.66 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் 

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பயணியிடம் 18.66 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் சட்ட விரோதமாக தங்கம் கடத்தப்படுவதாக உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் துபாயில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த இறங்கிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நஷீஃப் (21), என்ற பயணியிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவரது பையில் இருந்த அட்டைப் பெட்டிகளை திறந்து பார்த்தபோது அவற்றில் ஃபேன், ஹீட்டர் உள்ளிட்ட பொருள்கள் இருந்தனர். அவற்றை திறந்து பார்த்தபோது 389 கிராம் எடையிலான தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பின்னர் ரூ18.66 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அவரிடம் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

;