கள்ளக்குறிச்சி, ஜன. 24- கள்ளக்குறிச்சி அருகே இந்திலி யில் உள்ள டாக்டர் ஆர்கேஎஸ் கல்லூரி மாணவர்கள் மண்டல அளவில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றனர். இந்த மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்வி நிறு வனங்களின் தலைவர் மருத்துவர் மகுடமுடி தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் மருத்துவர் குமார் செயலாளர் கோவிந்தராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற் கல்வி இயக்குனர் பாலாஜி வரவேற்றார். கல்லூரி முதல்வர் மோகன சுந்தர், துணை முதல்வர் முனை வர் ஜான்விக்டர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்த்துறை இளங்கலை முதலாமாண்டு மாணவர் சதீஷ்குமார் 74 கிலோ எடை பிரிவிலும், இளங்லை முத லாமாண்டு மாணவர் பரசுராமன் 92 கிலோ எடை பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டினர். இந்த மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் மல்யுத்தப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உடற்கல்வி இயக்குநர் விக்னேஷ்குமார் நன்றி கூறினார்.