வடலூர் வார சந்தையில் ரூ.2.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
கடலூர், ஜூன் 16- கடலூர் மாவட்டம் வடலூர் வாரச்சந்தை ஒவ்வொரு சனிக்கிழமையும் கூடுவது வழக்கம். இந்த முறை, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தையில் விற்பனை களைகட்டியது. இந்த சந்தையில் ஆடுகளை வாங்கு வதற்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, திரு வண்ணாமலை, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் அதிகமாக திரண்ட னர். ஒரு ஆடு விலை குறைந்த பட்சம் ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்ச விலை ரூ.45 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஒட்டு மொத்தமா ரூ.2.5 கோடிக்கு ஆடு கள் விற்பனையானது.
பறக்கும் படையினர் பணி ஆய்வு
விழுப்புரம், ஜூன் 16- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டி அருகே ராதா புரம் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.பழனி ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் சரிபார்க்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பழனி, வட்டாட்சியர் யுவராஜ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
மே மாத பாமாயில், பருப்பு பெற்றுக்கொள்ளலாம்: ஆட்சியர்
கடலூர்,ஜூன் 16- கடலூர் மாவட்டத்தில் மே மாதம் பாமாயில், துவரம் பருப்பு வாங்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரையில் நியாய விலை கடை களில் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மே மாதம் பாமாயில் மற்றும் துவரம் கிடைக்காத குடும்ப அட்டை தாரர்கள் மட்டும் நியாய விலைக் கடைகளில் இம் மாதம் 30 வரைக்கும் பெற்று கொள்ளலாம். மேலும், ஜூன் மாதத்திற்கான அத்தியா வசியப் பொருட்களை வழக்கம் போல் பெற்றுக் கொள்ள லாம் என்று அறிக்கை ஒன்றில் ஆட்சியர் தெரி வித்திருக்கிறார்.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை
ராணிப்பேட்டை, ஜூன் 16- ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பூர் கிராமம் இஸ்திமா நகரில் கடந்த 2022 ஏப்ரல் 18 ஆம் தேதி இக்பால் ( 66) இம்ரான் ( 25) ஆகியோருக்கிடையே ஏற்பட்ட தகராறில் இக்பால் கொல்லப்பட்டார். இதையடுத்து, இம்ரான் மீது ஆற்காடு நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் இறுதி விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. இவ்வழக்கில் சனிக்கிழமை அன்று (ஜூன் 15) தீர்ப்பு வழங்கப் பட்டது. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இம்ரானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிக்கு பாலியல் தொல்லை
கிருஷ்ணகிரி, ஜூன் 16- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், பாவக்கல் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (37). இவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரிடம் துணி தைக்க வந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு தையல் கடைக்காரர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தையல் கடைக்காரர் பார்த்திபன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.