tamilnadu

வணிகர்களுக்கு வரிவிலக்கு அளித்து வணிகத்தை காப்பாற்றுக ஏம்.எம்.விக்கிரமராஜா கோரிக்கை

சென்னை, மார்ச் 24- வெளிநாடுகளில் தொழில்-வணிகத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதைப் போல நம் நாட்டு வணிகர்களுக்கு வரிவிலக்கு அளித்து, வணிகத்தை காப்பாற்ற வேண்டும்  எனவும், 144 தடை உத்தரவால் பாதிக்கப்ப டும் வணிகர்களுக்கும், பணியாளர்களுக்கும் உதவ வேண்டும் எனவும் தமிழ்நாடு வணி கர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தடுப்பு முன்  னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க் கிழமை (மார்ச் 24) மாலை 6 மணிமுதல் வரு கின்ற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி காலை 6 மணி வரை அறிவித்துள்ள 144 தடை உத்தர விற்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க  வேண்டும் என பேரமைப்பு கேட்டுக் கொள்கிறது. கடந்த கால பொருளாதார மந்த நிலை யால் தயாரிப்பு தேக்கம், பணியாளர்கள் ஊதிய நிலுவை, பணிக் குறைப்பு, வணிக  இழப்பு, ஜி.எஸ்.டி பணிச்சுமை, உணவு  பாதுகாப்பு சட்ட விதிகளின் தாக்கங்கள் என  மிகவும் வேதனையான கால கட்டத்தில் வணி கர்கள் உள்ளனர். இப்போது சுகாதார பேரிடர் காலம் நம் முன்னே நிலவிக் கொண்டிருக்கி றது. சோதனை மேல் சோதனையாக அனைத்து இடர்பாடுகளையும் தாங்கி நாம்  வரி வசூலித்து அரசுக்கு செலுத்தும் பணியை  ஊதியமின்றி இன்றுவரை சேவை மனப்பான்மையுடன் செலுத்தி வருகிறோம். இந்நிலைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது பேரமைப்பின்  கடமையாகும். பணியாளர்களின் ஊதியச்சுமை, கடை அடைப்பால் ஏற்படும் பொருளாதார இழப்பு, நிதி ஆதார பற்றாக்குறை,  பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 6 மாதங்களுக்கான குடிமைப் பொருட்கள் வழங்கிட நடவடிக்கை எடுத்து உதவுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு பேரமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கின்றோம். மேலும், வெளி மாநிலங்களிலிருந்து சந்தைப் பொருட்களை ஏற்றிவரும் கனரக வாகனங்களை எந்தவித இடையூறுமின்றி அவர்களின் இலக்கு நிறுவனங்களுக்கு கொண்டு சென்று சேர்த்திட அரசும், அரசு அதிகாரிகளும் உதவ வேண்டும். அரசு எவ்வித ஆரதவும் அளித்திடாமல் தொடர்ந்து இதே சூழல் நிலவுமானால் ஏற்க னவே தொடர் நஷ்டத்தில் இயங்கி வரும் பெரும்பாலான வணிக நிறுவனங்களை மூடும் சூழல் ஏற்படுவதோடு, பணியாளர்கள் பணி இழப்பும், அரசுக்கு வருவாய் இழப்பும், பணிநீக்கம் காரணமாக அரசுக்கு கூடுதல் சுமையும், ஏற்படும் என்பதை பொது  நலன் கருதி அரசுக்கு பேரமைப்பு முன் னெச்சரிக்கையாக அறிவிப்பதோடு, போர்க்கால அடிப்படையில் உடனடி தீர்வு  காணவும் வலியுறுத்துகிறது. மேலும், அமெ ரிக்கா, ஜெர்மனி, கனடா, இத்தாலி போன்ற வெளிநாடுகளில் தொழில், வணிகத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதைப் போல நம்  நாட்டு வணிகர்களுக்கும் வரிவிலக்கு அளித்து வணிகத்தை காப்பாற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும். தற்போது தடை உத்தரவு அமலில் உள்ள காலகட்டத்தில் விதிவிலக்கு அளித்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து, பிற வணிக  நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்ற நிலை யில் போக்குவரத்தும் குறைக்கப்பட்டு மக்கள்  நடமாட்டம் வெகுவாகவே குறைந்திருக்கும். இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்றச்  செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் கொள்ளை யர்கள் கடை உடைப்பு, கொள்ளை, போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடும். எனவே மூடப்பட்டுள்ள அனைத்து கடைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தக்க பாதுகாப்பு  வழங்க வேண்டும். அசாதாரண சூழ்நிலை நிலவும் இத்தருணத்தில் பொதுமக்கள் நலன்  கருதி லாபநோக்கம் இன்றி விலையேற்றம் செய்யாமல், மக்கள் நலனே குறிக்கோள் எனும் நோக்கில் வணிகர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.