tamilnadu

img

போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்

சென்னை, ஜூன் 28- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் பெரம்பூர் சர்மா நகரில் வெள்ளியன்று (ஜூன் 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பூர் பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச்  செயலாளர் எல்.சுந்தர ராஜன், மாநிலக்குழு உறுப் பினர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம் ஆகியோர் பேசினர்.

இதுகுறித்து எல்.சுந்தர ராஜன் கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 64க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர். இன்னும் பலர் இறக்கக் கூடும் என்ற நிலை உள்ளது. இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் சில நடவடிக்கைகளை உடனடி யாக மேற்கொண்டுள்ளார். காவல் துறையும் சாராயம் விற்ற நபர்களை கைது செய்துள்ளனர்.

முதலமைச்சர், மாணவர் களின் கல்வித் தரத்தை உயர்த்த பல்வேறு முயற்சி களை எடுத்து வருகிறார். பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த முயற்சிக்கு களங்கம்  ஏற்படுத்தும் வகையில் ஆளும் கட்சியை சேர்ந்த சில பிரமுகர்களின், அதிகாரி களின் நடவடிக்கை உள்ளது. எனவே முதலமைச்சர் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட் கள் விற்பனையில் தொடர் புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து,  முற்றிலும் போதை இல்லா  தமிழகமாக மாற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும்.  இதுபோன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து அங்கு வேலைவாய்ப்பு களை உருவாக்கி, அவர் களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள் கிறோம் என்று அவர் கூறினார்.

இதில் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ராணி, கே.எஸ்.கார்த்தீஷ்குமார், எல்.பி.சரவணத்தமிழன், மா.பூபாலன், எஸ்.பாக்கி யம் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.

யார் ஆட்சியில் இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் போது, சிலர் மீது நடவடிக்கை எடுப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்
கதையாக உள்ளது. இது தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகள் தான் மேற்கொள்ளப்படுகின்றன. இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறும் போது ஆட்சியில் இருப்பவர்கள் இனி முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் மீண்டும் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறது.

 

கள்ளச்சாராயம் மட்டுமன்றி போதை பொருட்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. தற்போது கிராமம் வரை மிக எளிமையாக போதை பொருட்கள் கிடைக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி
வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக வடசென்னை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் போதை பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. அதேபோல் மதுபான கூடங்கள் (பார்) பெரும்பாலான பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படுகிறது.