tamilnadu

img

கொரோனா மரபியல் ஆய்வுக்கு  சென்னையில் ‘ஜெனோம்’ ஆய்வகம்.... சுகாதாரத் துறை  முதன்மைச் செயலாளர் தகவல்....

சென்னை:
கொரோனா மரபியல் குறித்து ஆய்வுசெய்ய சென்னையில் ஜெனோம் ஆய்வகம் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த மூன்று நாட்களில்  சோதனை முயற்சியாக ஆய்வகம் செயல்படவுள்ளதாகவும்  சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில், கொரோனா தொற்றை குறைப்பதற்கு அனைத்து நடவடிக்கையும்   எடுக்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதை கண்காணித்து, மாநில எல்லைகளில் கொரோனா  சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் தொற்று பரவல் ஏறி இறங்கி வரும் 13 மாவட்டங்களையும் கண்காணித்து வருகிறோம். செப்டம்பர் 1 ஆம் தேதி கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்படுவதால், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், நிகழ்வுகள் உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து கண்காணித்து ரத்த மாதிரிகளை எடுக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கொரோனா மரபியல் மாற்றங்களை ஆய்வுசெய்து கண்டறியசென்னையில் ஜெனோம் ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக அடுத்த மூன்று நாட்களில் ஆய்வகம் செயல்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

;