தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு போடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தி.க. தேனி மாவட்டத் தலைவர் ச.ரகுநாகநாதன், சிபிஎம் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மூத்த தலைவர்கள் கே.ராஜப்பன், எல்.ஆர்.சங்கரசுப்பு, சிபிஐ தேனி மாவட்டச் செயலாளர் கே.பெருமாள், தி.க. மாவட்டச் செயலாளர் பூ.மணிகண்டன், ஆதித்தமிழர் பேரவை மேற்கு மாவட்டத் தலைவர் மாவீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.