சென்னையில் சர்வதேச புத்தகத் கண்காட்சிக்கு ரூ.6.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் வருகிற ஜனவரி 16,17,18 ஆகிய மூன்று நாள்கள் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமும் இணைந்து நடத்துகிறது.
இந்நிலையில், சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ரூ.6.60 கோடி நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
சர்வதேச புத்தகக் கண்காட்சி மூலம் இந்தியாவில் உள்ள எழுத்தாளர்களின் புத்தகங்களை பிற மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்பும், வெளிநாட்டு புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான வாய்ப்பும் இந்த சர்வதேச புத்தகக்கண்காட்சி மூலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வரும் நிலையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துடன் கல்வித்துறை இணைந்து முதன்முறையாக சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.